கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளது.

For More :- Puthinam

கிழக்கு மாகாண தேர்தல் - ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண தேர்தலில் மொத்தமாக 308886 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் 105341 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 59298 பெற்று 4 ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் 144,247 வக்குகளை பெற்று 8 ஆசனங்களையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்டத்தில் 70,858 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 58602 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் , அம்பாறை மாவட்டத்தில் 121,272 பெRறு 6 ஆசனங்களையும், மொத்தமாக 250732 வாக்குகளை பெற்று 15 ஆசனக்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பறியுள்ளது . மக்கள் விடுதலை முன்னனி மொத்தமாக 9390 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன், மக்கள் ஜனநாயக முன்னனி மொத்தமாக 7714 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஜெயராஜ் பெர்னான்டோபிள்ளை மீதான தாக்குதல் வீடியோ வடிவில்

தினக்குரல் பத்திரிகைக்கு அகவை 12

தினக்குரல் பத்திரிகை தனது பத்திரிகைத்துறையில் 11வது ஆண்டை முடித்து 12வது அகவையில் காலடி வைக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

திரு சுஜாதா அவர்களுக்கு அஞ்சலிகள்


சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.